பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம்: சந்தேக நபர்களை தடுப்...
News
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம்: சந்தேக நபர்களை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!
இயன்முறை மருத்துவரின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை 48 மணி நேரத்திற்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, பிரதான சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் ஓட்டுநர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
பிரதான சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் வெள்ளவத்தையி இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, யாழ்ப்பாணத்தின் கைதடிப் பகுதியில் வைத்து வலன ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர்களான தம்பதியினர் பின்னர் நேற்று (24) நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், குறித்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் ஓட்டுநர், நுவரெலியா பொலிஸாரின் ஒரு குழுவால் கைது செய்யப்பட்டார்.
இதற்கு ஆதரவளித்த பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவரைக் கைது செய்வதற்காக நுவரெலியா பொலிஸ் குழுவொன்று நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.
இதன்படி, பிரதான சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் ஓட்டுநர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
பிரதான சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் வெள்ளவத்தையி இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, யாழ்ப்பாணத்தின் கைதடிப் பகுதியில் வைத்து வலன ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர்களான தம்பதியினர் பின்னர் நேற்று (24) நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், குறித்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் ஓட்டுநர், நுவரெலியா பொலிஸாரின் ஒரு குழுவால் கைது செய்யப்பட்டார்.
இதற்கு ஆதரவளித்த பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவரைக் கைது செய்வதற்காக நுவரெலியா பொலிஸ் குழுவொன்று நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.