New Updates! Fresh news just arrived.

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து: பலி எண்ணிக்கை மேல...

News

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!

June 5, 2026 12:34 pm
முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!
ஹொரணை - அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அமைந்துள்ள 'செனஹஸே கெதெல்ல' முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

இதன்படி, முன்தினம் (3) ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 13 ஆக உயர்ந்துள்ளது.

குறித்த தீ விபத்தில் மேலும் 5 பேர் பலத்த காயங்களோடு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போதுவரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த வேளையில் இந்த முதியோர் இல்லத்தில் 72 பேர் தங்கியிருந்தனர் என்பதுடன், தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 10 பேர் கட்டிடத்திற்குள்ளேயே தீயில் கருகி உயிரிழந்திருந்தனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now