New Updates! Fresh news just arrived.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜர்! ...

News

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜர்!

January 28, 2026 3:06 pm
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜர்!
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்கில் முன்னிலையாவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், தனது மனைவியாகிய பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவினுடைய பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரசாங்கத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே குறித்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய, குறித்த வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி, அங்கு கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்பு ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சார்பில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மருத்துவ அறிக்கைகளினை பரிசீலித்த கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவரினை விடுவிக்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now