New Updates! Fresh news just arrived.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினை பழிவாங்கத் துடி...

News

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினை பழிவாங்கத் துடிக்கின்றார்கள்: முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!

February 24, 2026 2:34 am
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினை பழிவாங்கத் துடிக்கின்றார்கள்: முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வுல்வர்ஹாம்டன் (Wolverhampton) பல்கலைக்கழகத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கான அழைப்பிதழ் இதோ இருப்பதாகவும் அதனை ஊடகங்களுக்குக் காண்பித்து முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளருமான ஹரின் பெர்னான்டோ விளக்கமளித்தார்.

இன்றைய தினம் கொழும்பிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பல இலட்சம் ரூபாய்களைச் செலவழித்து இந்த வழக்குக்காகத் தகவல்களைத் தேடியவர்களுக்கு, இவ்வளவு தெளிவான இந்த அழைப்பிதழ் கிடைக்காமல் போனது பெரும் ஆச்சரியத்திற்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் உள்ளவர்கள் ஏன் இந்த ஒரு விடயத்தைப் பிடித்துக்கொண்டு இவ்வளவு தூரம் அலைகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், தங்களை விடவும் அறிவு ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உயர்ந்த மட்டத்தில் இருப்பவர்கள் மீதுள்ள பொறாமையாலேயே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இந்தப் பயணம் ரணில் விக்கிரமசிங்கவும் மைத்ரி விக்கிரமசிங்கவும் இணைந்து மேற்கொண்ட ஒரு சாதாரண சுற்றுலா அல்ல என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

குற்ற்றப் புலனாய்வு திணைக்களத்தினை போன்ற நிறுவனங்களை ஏமாற்றுவது போல வுல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தை எவராலும் ஏமாற்ற முடியாது என்றும், குறித்த நிறுவனம் யாருடைய விருப்பத்திற்கும் ஏற்றவாறு வாக்குமூலங்களை வழங்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு ஜனாதிபதி எங்கு சென்றாலும் அவர் ஜனாதிபதியாகவே கருதப்படுவார் என்பதைச் சுட்டிக்காட்டிய ஹரின் பெர்னாண்டோ, முழு விமானத்தையே வாடகைக்கு எடுத்துக்கொண்டு உலக நாடுகளுக்குச் சுற்றுலா சென்ற ஜனாதிபதிகள் இருந்த இந்த நாட்டில், லண்டனுக்குச் சென்று வெறும் வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டுத் தனது கடமையைச் செய்த ஒரு மனிதரை இன்று பழிவாங்கத் துடிக்கிறார்கள் என ஆவேசமாகத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கமானது தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதாகவும், இது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினுடைய ஆட்சியின் முடிவிற்கான ஆரம்பமாக அமையலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

தவறு செய்பவர்களுக்கு அதற்கான பிரதிபலன்களானது விரைவில் கிடைக்கும் எனக் குறிப்பிட்ட அவர், இன்னும் சில காலங்களில் அரச அதிகாரிகள் இவ் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதினை நிறுத்திக்கொள்வார்கள் என எதிர்வுகூறியுள்ளார்.

அத்தோடு, உயர் பதவிகளினைப் பெற்றுக்கொள்வதற்காகச் சில சட்டத்தரணிகள் அரசாங்கத்திற்குச் சார்பாகச் செயற்படுவதாகவும், அவர்களும் ஒருநாள் ஓய்வுபெற வேண்டிய காலமானது வரும் என்பதினை மறந்துவிடக் கூடாது என அவர் தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now