முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு மீண்டும்...
News
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியினுடைய செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வருகின்ற ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
அரச நிதியினை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த வழக்கு விசாரணையின் போது, விசாரணையின் முன்னேற்றத்தினை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றமானது உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் பின்வரும் விடயங்களினை நீதிமன்றத்தில் தெரிவித்தார்,
எதிர்வருகின்ற ஜூலை 8ஆம் திகதிக்கு முன்னதாக சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவராக உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினுடைய மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவையும் பெயரிடுவதா என்பது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விசாரணைகளினுடைய தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றங்களினை அடுத்த தவணையின் போது சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அரச நிதியினை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த வழக்கு விசாரணையின் போது, விசாரணையின் முன்னேற்றத்தினை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றமானது உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் பின்வரும் விடயங்களினை நீதிமன்றத்தில் தெரிவித்தார்,
எதிர்வருகின்ற ஜூலை 8ஆம் திகதிக்கு முன்னதாக சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவராக உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினுடைய மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவையும் பெயரிடுவதா என்பது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விசாரணைகளினுடைய தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றங்களினை அடுத்த தவணையின் போது சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.