New Updates! Fresh news just arrived.

கிளிநொச்சி பகுதியில் புதையல் தோண்டிய நான்கு மின்சார சபையி...

News

கிளிநொச்சி பகுதியில் புதையல் தோண்டிய நான்கு மின்சார சபையின் உத்தியோகத்தர்கள் கைது!

January 12, 2026 2:24 pm
கிளிநொச்சி பகுதியில் புதையல் தோண்டிய நான்கு மின்சார சபையின் உத்தியோகத்தர்கள் கைது!
நேற்றைய தினம் (11) மதியம் 12:45 அளவில் கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதியில் புதையல் தோண்டிய நான்கு மின்சார சபை உத்தியோகத்தர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது

கிளிநொச்சி அறிவியல் நகர் சிறப்பு அதிரடிப்படை முகாமின் டி.ஆர்.எல். அதுக்கோரல அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய 11.01.2026 அன்று மதியம் 12.45 மணியளவில் கிளிநொச்சி மின்சார சபையின் சுற்று பகுதியில் ஓர் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்

இதன் போது விடுதி பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த அனுராதபுரம் மின்சார சபையில் பணியாற்றும் 04 ஊழியர்களும், புதையல் தோண்டுவதற்கு பயண்டுத்திய பொருட்கள் என்பனவும் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பின்வரும் குற்றச்சாட்டுகளின் பேரில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது முதலாவது அரசு நிலத்தில் புதையல் தேடும் நோக்கத்திற்காக உரிமம் இல்லாமல் அகழ்வாராய்ச்சி செய்தல் மற்றும் அரசு சொத்தை தவறாகப் பயன்படுத்துதல் எனும் குற்றச்சாட்டுகளில் சந்தேக நபர்கள் விசாரணைகள் செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்க பட்டுள்ளனர்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now