மின்சார நெருக்கடியால் அரசாங்கம் விடுத்துள்ள அவசர வேண்டுகோ...
News
மின்சார நெருக்கடியால் அரசாங்கம் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!
மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்தான இறுதித் தீர்மானம் எதிர்வருகின்ற ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக சந்தை நிலவரங்களினைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தினை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாத நிலவரங்களினை கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தினை 13 சதவீதத்தினால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாகவும், அது குறித்த இறுதி முடிவினை ஏப்ரல் முதலாம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினுடைய தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவிக்கையில்:
"எதிர்வரும் மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததினால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளினை முன்னெடுக்க முடியும். இதன் காரணமாக மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இது ஒரு பாரிய பிரச்சினையாகும். எதிர்வருகின்ற ஏப்ரல் மாதம் 12, 13 திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளது, ஆனால் நெப்தா வராது. அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். இந்த நெருக்கடியினால் இனிவரும் காலங்களில் இரவு நேரங்களில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆகவே, ஒரு விளக்கையாவது அணைத்து, வீதி விளக்குகளினையும் அணைத்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே எம்மால் நிலைமையினை சமாளிக்க முடியும். பொதுமக்கள் இதில் தியாகங்களினை செய்ய வேண்டியுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக சந்தை நிலவரங்களினைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தினை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாத நிலவரங்களினை கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தினை 13 சதவீதத்தினால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாகவும், அது குறித்த இறுதி முடிவினை ஏப்ரல் முதலாம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினுடைய தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவிக்கையில்:
"எதிர்வரும் மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததினால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளினை முன்னெடுக்க முடியும். இதன் காரணமாக மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இது ஒரு பாரிய பிரச்சினையாகும். எதிர்வருகின்ற ஏப்ரல் மாதம் 12, 13 திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளது, ஆனால் நெப்தா வராது. அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். இந்த நெருக்கடியினால் இனிவரும் காலங்களில் இரவு நேரங்களில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆகவே, ஒரு விளக்கையாவது அணைத்து, வீதி விளக்குகளினையும் அணைத்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே எம்மால் நிலைமையினை சமாளிக்க முடியும். பொதுமக்கள் இதில் தியாகங்களினை செய்ய வேண்டியுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.