New Updates! Fresh news just arrived.

நல்லூரில் நடைபெற்ற மாணவர்களை வலுவூட்டும் 'பசுமை அறிவ...

News

நல்லூரில் நடைபெற்ற மாணவர்களை வலுவூட்டும் 'பசுமை அறிவொளி' வேலைத்திட்டம்!

January 26, 2026 7:26 pm
நல்லூரில் நடைபெற்ற மாணவர்களை வலுவூட்டும் 'பசுமை அறிவொளி' வேலைத்திட்டம்!
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினுடைய மாணவர்களினை வலுவூட்டும் 'பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

பசுமை இயக்கத்தினுடைய தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வவுனியா பிராந்தியத்தினுடைய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளரான எந்நிரி ச. சர்வராஜா கலந்துகொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராகக் கணிய அளவையாளர் ரோகினி ஜெயராம் பங்கேற்றிருந்தார்.

மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் போதித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்கேற்பாளராக்கும் நோக்கோடு , அவர்களில் பல்துறை ஆளுமையினை விருத்தி செய்யும் நோக்குடனும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் 'பசுமை அறிவொளி' நிகழ்ச்சித் திட்டத்தினை கிராமங்களில் நடாத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் நடைபெற்றுள்ளது.

இதன்படி, வரவேற்புரையைப் பசுமை இயக்கத்தினுடைய மத்திய குழு உறுப்பினர் பா. காசிநாதன் ஆற்ற, நன்றியுரையினை பொதுச் செயலாளர் ம. கஜேந்திரன் ஆற்றியிருந்தார். பொருளாளர் க. கேதீஸ்வரநாதனும் பங்கேற்றிருந்த குறித்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now