New Updates! Fresh news just arrived.

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்த...

News

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்!

June 2, 2026 4:08 pm
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை சவாலுக்கு உட்படுத்தி, பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பிலான வாய்மொழி சமர்ப்பணங்களின் விசாரணையானது இன்று (02) நிறைவடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now