New Updates! Fresh news just arrived.

தனியார் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டு: இருவர் கைது...

News

தனியார் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டு: இருவர் கைது!

March 1, 2026 7:42 pm
தனியார் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டு: இருவர் கைது!
நீண்ட காலம் செயற்படாமலிருந்த தனியார் அனல் மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருட்டு சம்பவத்தோடு தொடர்புடையதாக இருவர் சந்தேகத்தின் பேரில் நிந்தவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக தனியார் அனல் மின் நிலையத்தில் இடம்பெற்று வந்ததாக கூறப்படுகின்ற குறித்த திருட்டு தொடர்பில் உரிமையாளர் முறைப்பாடு ஒன்றினை அண்மையில் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் வழங்கியிருந்தார்.

இதற்கமைவாக செயற்பட்ட பொலிஸார் குறித்த சம்பவ இடத்திற்கு நேற்று சனிக்கிழமை (28) அம்பாறையிலிருந்து தடயவியல் பொலிஸாரை மேலதிக விசாரணைக்கு அழைத்திருந்ததுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய காவலாளி உட்பட மற்றுமொரு சந்தேக நபரினையும் நிந்தவூர் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

அத்தோடு, கைதான சந்தேக நபர்கள் இருவரும் தடுத்து வைக்கப்ப்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளினை மேற்கொண்டுள்ளனர்.

இதில் ஒரு சந்தேக நபர் வாயு துப்பாக்கி ஒன்றினை வைத்துக் கொண்டு குறித்த தனியார் அனல் மின் நிலையத்திலுள்ள புறாக்களினை வேட்டையாட வந்திருந்ததாக கூறி இருந்தமை ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரிவந்துள்ளது.

மேலும், சந்தேக நபர் வசம் இருந்து மீட்கப்பட்ட வாயு துப்பாக்கி குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now