இனவாத அரசியலுக்கு நான் ஒருபோதும் ஆதரவாளன் அல்ல: பேச்சுவார...
News
இனவாத அரசியலுக்கு நான் ஒருபோதும் ஆதரவாளன் அல்ல: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தேன்- கலையரசனுக்கு ஹரீஸ் பதில்!
அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசு அவர்கள் நான் கூறிய விடயங்களை பிழையாக விளங்கி சில கருத்துக்களை கூறியுள்ளார்.
தமிழ்- முஸ்லிம் ஒற்றுமையை விரும்பும் மக்கள் அவருடைய கருத்தினால் வேதனைப்பட்டிருப்பார்கள் என்று எண்ணுகின்றேன். உண்மையில் கல்முனை உப பிரதேச செயலக விடயத்திற்கு சமாதான முறையில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக எம்.ஏ சுமந்திரன் அவர்களிடம் வேண்டியிருந்தேன் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழ்- முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள் இந்த உப பிரதேச செயலக பிரச்சினைக்கு சமாதானமான ஒரு தீர்வை எட்டவேண்டும். தமிழ்- முஸ்லிம் மக்கள் எல்லையுடனான ஒரு நிர்வாக அலகை பெறவேண்டும் என்பது கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் இதைத்தான் பேச்சுவார்த்தை ஊடாக செய்யுங்கள் என்று வேண்டியுள்ளேன் என உள்ளுராட்சி மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று (05) கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடந்து அங்கு பேசிய அவர்,
இதை வலியுறுத்தித்தான் நான் எனது கருத்துக்களையும் அது சார்ந்த விடயங்களையும் கூறினேன். அதே நேரம் கல்முனைத் தொகுதி இலங்கை தமிழரசுக்கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி நிதன்சன் அவர்களும். என் மீது சில வினாக்களைத் தொடுத்துள்ளார். குறிப்பாக கடந்த காலங்களில் பேச்சுவார்த்தை. நடைபெற்றதாகவும், அந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் உடன்பாட்டுக்கு வர இருந்ததாகவும், நான்தான் அந்தத் தீர்வு எட்டுவதற்குத் தடையாக இருந்தேன் என்ற ஒரு அபாண்டத்தை தெரிவித்திருக்கின்றார்.
இந்த பேச்சுவார்த்தைகள் 2017 ஆம் ஆண்டு நவம்பரில் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தலைமையில் அவரது அமைச்சிலும் இன்னும் சில இடங்களிலும் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது, அதில் தமிழ்த் தரப்பிலிருந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர்களாக இருந்த ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோர்களுடன் தற்போதைய பொது செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட எம்.பிக்களும், முஸ்லிம் தரப்பிலிருந்து ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்களும் நான் உட்பட அரசியல் முஸ்லிம் பிரதிநிதிகளும், சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டோம்.
குறித்த பேச்சுவார்த்தையில் எல்லோரும் சாட்சியாகவும் இருக்கின்றார்கள் எந்தத் தீர்வும் முஸ்லிம் மற்றும் தமிழ் தரப்பும் எட்டவில்லை. கடைசியில் "வெண்ணை திரண்டு வரும்போது தாலி உடைந்த சம்பவம்" எதுவும் என்னால் அங்கு நடைபெறவில்லை என்பது எல்லோரும் அறிந்த விடயம். எந்த இணக்கப்பாட்டுக்கும் வராத நிலையிலேயே பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
அதன் பின்பு. ஈஸ்டர் குண்டு தாக்குதல் பின்பு கல்முனை நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்து கொழும்பில் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் இல்லத்தில் இதே தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர் சம்மந்தன் ஐயா தலைமையிலான இதே சுமந்திரன், மாவை போன்ற தலைவர்களும் கோடீஸ்வரன் எம்.பி உட்பட பல தமிழ் பிரதிநிதிகளும் அதேவேளை, முஸ்லிம் தரப்பில் ஸ்ரீ.ல.மு.கா தலைவரான ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா தலைவரான ரிஷாட் பதியுதீன் இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள நிஸாம் காரியப்பர் உட்பட நாங்களும் இருந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தையானது நடத்தப்பட்டது. இருந்த போதிலும் குறித்த பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படவில்லை.
அந்த இடத்தில் என்னால் தான் தீர்வு தடைப்பட்டது என்று யாரும் கூறவுமில்லை, கூறவும் முடியாது. அங்கு ஒரு சாத்தியமான தீர்வை எட்டுவதற்கு முடியாமல் போய்விட்டது. பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட முஸ்லிம் தரப்பை சார்ந்த ஒருவரோ அல்லது சுமந்திரன் போன்ற யாரோ ஒருவர் வந்து கூற வேண்டும் நாங்கள் கலந்து கொண்ட எல்லா முஸ்லிம் தலைவர்களும் தீர்வுக்கு ஒத்துக்கொண்டாலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசால் தான் தீர்வு எட்டப்பட முடியாமல் போகி விட்டது என்று. என்ன தீர்வு எட்டப்பட்டது என்பதையும் அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் தான் இரண்டு விடயங்களையும் தெளிவுபடுத்த வேண்டும்.
எனவே வெறுமனே தமிழ் முஸ்லிம் உறவு மேம்பட்டு வருகின்ற நேரத்தில் எங்களை நோக்கி வீணான தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே நேரம் உங்களுடைய வார்த்தைகள் சில இடங்களில் வரம்பு மீறியதாக இருப்பது கவலை அளிக்கின்றது. தமிழ் மக்களின் உரிமைக்காகப் பேசுகின்ற முன்னாள் எம்.பி கலையரசன் அவர்களையோ அல்லது கவீந்திரன் கோடிஸ்வரன் எம்.பி அவர்களையோ அல்லது எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் எம்.பி போன்றவர்களையோ இதுவரையும் நாங்கள் பொதுவெளியில் இவர்கள் இனவாதிகள் என்று நாங்கள் கூறுவதில்லை. அது அவர்கள் சமூகம் சார்ந்த விடயத்தைப் பேசுகிறார்கள் என்ற ஒரு புரிந்துணர்வு எங்களுக்கு இருக்கின்றது. ஆனால் எடுத்தவுடன் எங்களை. நோக்கி கடும் சொற்றொடர்களைப் பாவித்து கருத்துக்களை வெளியிடுவது வேதனையான விடயம்.
முக்கியமாக நான் தமிழ் மக்களை நோக்கி புலிச்சாயம் பூசியதாக முன்னாள் எம்.பி தவராசா கலையரசன் அவர்கள் கூறியுள்ளார். அது அப்பட்டமான பொய்யாகும். நான் எங்கும் தமிழ் மக்களை நோக்கி புலிச்சாயம் பூசி கருத்துக்களை வெளியிடவில்லை. தமிழ்- முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து கொள்ள முஸ்லிம், தமிழ் சிவில் சமூகங்களை பேச்சுவார்த்தைக்கே நான் அழைத்திருந்தேன். இதில் என்ன தவறிருக்கிறது என்று கேள்வியெழுப்ப விரும்புகிறேன்.
முன்னாள் எம்.பி கலையரசன் மற்றும் சட்டத்தரணி நிஷான்சன் போன்றோர்களிடம் நான் வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால் நீங்களே சொல்லிவிட்டீர்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக நான் இருந்தேன் என்று. இது முஸ்லிம் சமூகத்திலும் பிழையான அர்த்தங்களை கொடுக்கும். இதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக இது சம்பந்தமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இதற்கப்பால் உடனடியாக நீங்கள் உண்மையில் ஒர
தமிழ்- முஸ்லிம் ஒற்றுமையை விரும்பும் மக்கள் அவருடைய கருத்தினால் வேதனைப்பட்டிருப்பார்கள் என்று எண்ணுகின்றேன். உண்மையில் கல்முனை உப பிரதேச செயலக விடயத்திற்கு சமாதான முறையில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக எம்.ஏ சுமந்திரன் அவர்களிடம் வேண்டியிருந்தேன் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழ்- முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள் இந்த உப பிரதேச செயலக பிரச்சினைக்கு சமாதானமான ஒரு தீர்வை எட்டவேண்டும். தமிழ்- முஸ்லிம் மக்கள் எல்லையுடனான ஒரு நிர்வாக அலகை பெறவேண்டும் என்பது கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் இதைத்தான் பேச்சுவார்த்தை ஊடாக செய்யுங்கள் என்று வேண்டியுள்ளேன் என உள்ளுராட்சி மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று (05) கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடந்து அங்கு பேசிய அவர்,
இதை வலியுறுத்தித்தான் நான் எனது கருத்துக்களையும் அது சார்ந்த விடயங்களையும் கூறினேன். அதே நேரம் கல்முனைத் தொகுதி இலங்கை தமிழரசுக்கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி நிதன்சன் அவர்களும். என் மீது சில வினாக்களைத் தொடுத்துள்ளார். குறிப்பாக கடந்த காலங்களில் பேச்சுவார்த்தை. நடைபெற்றதாகவும், அந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் உடன்பாட்டுக்கு வர இருந்ததாகவும், நான்தான் அந்தத் தீர்வு எட்டுவதற்குத் தடையாக இருந்தேன் என்ற ஒரு அபாண்டத்தை தெரிவித்திருக்கின்றார்.
இந்த பேச்சுவார்த்தைகள் 2017 ஆம் ஆண்டு நவம்பரில் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தலைமையில் அவரது அமைச்சிலும் இன்னும் சில இடங்களிலும் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது, அதில் தமிழ்த் தரப்பிலிருந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர்களாக இருந்த ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோர்களுடன் தற்போதைய பொது செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட எம்.பிக்களும், முஸ்லிம் தரப்பிலிருந்து ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்களும் நான் உட்பட அரசியல் முஸ்லிம் பிரதிநிதிகளும், சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டோம்.
குறித்த பேச்சுவார்த்தையில் எல்லோரும் சாட்சியாகவும் இருக்கின்றார்கள் எந்தத் தீர்வும் முஸ்லிம் மற்றும் தமிழ் தரப்பும் எட்டவில்லை. கடைசியில் "வெண்ணை திரண்டு வரும்போது தாலி உடைந்த சம்பவம்" எதுவும் என்னால் அங்கு நடைபெறவில்லை என்பது எல்லோரும் அறிந்த விடயம். எந்த இணக்கப்பாட்டுக்கும் வராத நிலையிலேயே பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
அதன் பின்பு. ஈஸ்டர் குண்டு தாக்குதல் பின்பு கல்முனை நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்து கொழும்பில் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் இல்லத்தில் இதே தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர் சம்மந்தன் ஐயா தலைமையிலான இதே சுமந்திரன், மாவை போன்ற தலைவர்களும் கோடீஸ்வரன் எம்.பி உட்பட பல தமிழ் பிரதிநிதிகளும் அதேவேளை, முஸ்லிம் தரப்பில் ஸ்ரீ.ல.மு.கா தலைவரான ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா தலைவரான ரிஷாட் பதியுதீன் இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள நிஸாம் காரியப்பர் உட்பட நாங்களும் இருந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தையானது நடத்தப்பட்டது. இருந்த போதிலும் குறித்த பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படவில்லை.
அந்த இடத்தில் என்னால் தான் தீர்வு தடைப்பட்டது என்று யாரும் கூறவுமில்லை, கூறவும் முடியாது. அங்கு ஒரு சாத்தியமான தீர்வை எட்டுவதற்கு முடியாமல் போய்விட்டது. பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட முஸ்லிம் தரப்பை சார்ந்த ஒருவரோ அல்லது சுமந்திரன் போன்ற யாரோ ஒருவர் வந்து கூற வேண்டும் நாங்கள் கலந்து கொண்ட எல்லா முஸ்லிம் தலைவர்களும் தீர்வுக்கு ஒத்துக்கொண்டாலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசால் தான் தீர்வு எட்டப்பட முடியாமல் போகி விட்டது என்று. என்ன தீர்வு எட்டப்பட்டது என்பதையும் அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் தான் இரண்டு விடயங்களையும் தெளிவுபடுத்த வேண்டும்.
எனவே வெறுமனே தமிழ் முஸ்லிம் உறவு மேம்பட்டு வருகின்ற நேரத்தில் எங்களை நோக்கி வீணான தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே நேரம் உங்களுடைய வார்த்தைகள் சில இடங்களில் வரம்பு மீறியதாக இருப்பது கவலை அளிக்கின்றது. தமிழ் மக்களின் உரிமைக்காகப் பேசுகின்ற முன்னாள் எம்.பி கலையரசன் அவர்களையோ அல்லது கவீந்திரன் கோடிஸ்வரன் எம்.பி அவர்களையோ அல்லது எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் எம்.பி போன்றவர்களையோ இதுவரையும் நாங்கள் பொதுவெளியில் இவர்கள் இனவாதிகள் என்று நாங்கள் கூறுவதில்லை. அது அவர்கள் சமூகம் சார்ந்த விடயத்தைப் பேசுகிறார்கள் என்ற ஒரு புரிந்துணர்வு எங்களுக்கு இருக்கின்றது. ஆனால் எடுத்தவுடன் எங்களை. நோக்கி கடும் சொற்றொடர்களைப் பாவித்து கருத்துக்களை வெளியிடுவது வேதனையான விடயம்.
முக்கியமாக நான் தமிழ் மக்களை நோக்கி புலிச்சாயம் பூசியதாக முன்னாள் எம்.பி தவராசா கலையரசன் அவர்கள் கூறியுள்ளார். அது அப்பட்டமான பொய்யாகும். நான் எங்கும் தமிழ் மக்களை நோக்கி புலிச்சாயம் பூசி கருத்துக்களை வெளியிடவில்லை. தமிழ்- முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து கொள்ள முஸ்லிம், தமிழ் சிவில் சமூகங்களை பேச்சுவார்த்தைக்கே நான் அழைத்திருந்தேன். இதில் என்ன தவறிருக்கிறது என்று கேள்வியெழுப்ப விரும்புகிறேன்.
முன்னாள் எம்.பி கலையரசன் மற்றும் சட்டத்தரணி நிஷான்சன் போன்றோர்களிடம் நான் வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால் நீங்களே சொல்லிவிட்டீர்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக நான் இருந்தேன் என்று. இது முஸ்லிம் சமூகத்திலும் பிழையான அர்த்தங்களை கொடுக்கும். இதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக இது சம்பந்தமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இதற்கப்பால் உடனடியாக நீங்கள் உண்மையில் ஒர