New Updates! Fresh news just arrived.

கொழும்பு சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

News

கொழும்பு சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

March 18, 2026 2:57 pm
கொழும்பு சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு!
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைப்பதற்கான கட்டணங்களை அறவிடுவதை, மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு மாநகர சபை தீர்மானித்துள்ளது.

இன்று (18) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மாநகர சபையின் நிதிக்குழுவும் இந்த முன்மொழிவுக்கு ஏகமனதாக இணக்கம் தெரிவித்து அதனை நிறைவேற்றியுள்ளது.

கடந்த காலங்களில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை வாகன தரிப்பிடக் கட்டணங்கள் அறவிடப்பட்டு வந்த போதிலும், தற்போது அந்த நடைமுறை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் பிரதி மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now