New Updates! Fresh news just arrived.

நாட்டு மக்களுக்கு பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்ப...

News

நாட்டு மக்களுக்கு பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 23, 2026 9:34 am
நாட்டு மக்களுக்கு பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு முற்றிலும் போலியானது என பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

"நாட்டின் பொருளாதார நெருக்கடி காலத்தில் பொதுமக்கள் அவதானிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்" எனும் தலைப்பில், பொலிஸார் அறிவுரை வழங்குவது போல் அமைந்துள்ள அந்தச் செய்திக்கும் இலங்கை பொலிஸாருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் தரப்பிலிருந்து பொதுமக்களுக்கு ஏதேனும் அறிவித்தல் விடுக்கப்படுவதாயின், அவை பின்வரும் முறைகளிலேயே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது:

பொலிஸ் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பின் கீழ் ஊடக அறிக்கையாக மட்டுமே உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகும்.

பொலிஸாரின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் மற்றும் யூடியூப் தளம் வாயிலாகவே அன்றாட செய்திகள் புதுப்பிக்கப்படும்.

பொலிஸ் இலச்சினை அல்லது பெயரைப் பயன்படுத்தி இவ்வாறான திட்டமிட்ட பொய் தகவல்களைப் பரப்புவோர் குறித்து கண்டறிய ஏற்கனவே விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, சமூக வலைதளங்களில் பரவும் இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத பதிவுகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now