ஈரானின் தாக்குதல்கள் இராணுவ இயலாமையை காட்டுகின்றன: இராஜதந...
News
ஈரானின் தாக்குதல்கள் இராணுவ இயலாமையை காட்டுகின்றன: இராஜதந்திர ஆலோசகர் அன்வர் கர்காஷ் குற்றச்சாட்டு!
ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுத்தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் சிரேஷ்ட இராஜதந்திர ஆலோசகர் அன்வர் கர்காஷ், ஈரானின் பிராந்திய நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாத நிலையால் அரபு வளைகுடா நாடுகளை இலக்காகக் கொண்டுள்ள ஈரானின் மூலோபாயம், அதன் இராணுவ இயலாமை, ஒழுக்கத் திவால்நிலை மற்றும் அரசியல் தனிமை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தவறாக வழிநடத்தும் ஊடகக் கருத்துக்கள் இந்த உண்மையை மறைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அண்டை நாடுகளை இலக்காகக் கொள்வதை நிறுத்தி, அவற்றின் நடுவர் முயற்சிகளை செயல்படுத்துவதிலிருந்தே சரியான பாதைக்கு திரும்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய அரபு அமீரகம் தினமும் தனது உறுதியை நிரூபித்து வருவதாகவும், தாக்குதலாளியின் வெறுப்பை விட எங்களின் உறுதி வலிமையானது என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாத நிலையால் அரபு வளைகுடா நாடுகளை இலக்காகக் கொண்டுள்ள ஈரானின் மூலோபாயம், அதன் இராணுவ இயலாமை, ஒழுக்கத் திவால்நிலை மற்றும் அரசியல் தனிமை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தவறாக வழிநடத்தும் ஊடகக் கருத்துக்கள் இந்த உண்மையை மறைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அண்டை நாடுகளை இலக்காகக் கொள்வதை நிறுத்தி, அவற்றின் நடுவர் முயற்சிகளை செயல்படுத்துவதிலிருந்தே சரியான பாதைக்கு திரும்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய அரபு அமீரகம் தினமும் தனது உறுதியை நிரூபித்து வருவதாகவும், தாக்குதலாளியின் வெறுப்பை விட எங்களின் உறுதி வலிமையானது என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.