ஈரானின் அணு ஆயுதம் ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல்! - G...
News
ஈரானின் அணு ஆயுதம் ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல்!
ஈரானுக்கு எதிரான விவகாரத்தில் அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு வலுவான நிலையில் உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப்பின் ஐ.நா தூதரான மைக் வோல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பது என்பது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானின் செயல்பாடுகளையும், அவர்கள் எல்லா திசைகளிலும் தாக்குதல் நடத்துவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
ஒருவேளை அவர்கள் அணு ஆயுதப் பாதுகாப்பின் கீழ் இதைச் செய்திருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் என்று அவர் கூறினார்.
ஈரானின் போர் முயற்சிகளுக்கு உதவும் வகையில் ரஷ்யா உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது என்ற கருத்துகள் குறித்து தாம் கருத்து தெரிவிக்கப் போவதில்லை என்று வோல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஒருவேளை அப்படித் தகவல் பகிரப்பட்டிருந்தால், அது நிச்சயமாக எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பது என்பது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானின் செயல்பாடுகளையும், அவர்கள் எல்லா திசைகளிலும் தாக்குதல் நடத்துவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
ஒருவேளை அவர்கள் அணு ஆயுதப் பாதுகாப்பின் கீழ் இதைச் செய்திருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் என்று அவர் கூறினார்.
ஈரானின் போர் முயற்சிகளுக்கு உதவும் வகையில் ரஷ்யா உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது என்ற கருத்துகள் குறித்து தாம் கருத்து தெரிவிக்கப் போவதில்லை என்று வோல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஒருவேளை அப்படித் தகவல் பகிரப்பட்டிருந்தால், அது நிச்சயமாக எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.