New Updates! Fresh news just arrived.

யாழ். பல்கலைக்கழகத்தில் 25வது ஆண்டு பொங்குதமிழ் நினைவேந்த...

News

யாழ். பல்கலைக்கழகத்தில் 25வது ஆண்டு பொங்குதமிழ் நினைவேந்தல்!

January 17, 2026 1:15 pm
யாழ். பல்கலைக்கழகத்தில் 25வது ஆண்டு பொங்குதமிழ் நினைவேந்தல்!
யாழ்.பல்கலைக்கழகத்தினுடைய பொங்கு தமிழ் பிரகடணத்தின் 25ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று (17) சனிக்கிழமை நினைவு கூரப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால், விரிவுரையாளர்கள், மாணவர்கள் இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளினை நினைவு கூர்ந்திருந்தனர்.

இதன்போது பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

குறித்த எழுச்சி நிகழ்வில் வைத்து தமிழ் மக்களினுடைய அபிலாசைகளான சுயநிர்ணைய உரிமை, மரபுவழித்தாயகம் மற்றும் தமிழ் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்று பொங்குதமிழ் பிரகடணமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now