New Updates! Fresh news just arrived.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழக்கு ஒக்டோபர் 28ஆம் திகதி விசாரணைக...

News

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழக்கு ஒக்டோபர் 28ஆம் திகதி விசாரணைக்கு!

September 16, 2026 11:27 am
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழக்கு ஒக்டோபர் 28ஆம் திகதி விசாரணைக்கு!
சட்டவிரோதமாக சொகுசு வாகனம் வைத்திருந்ததாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் இன்று (16) வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிணையில் உள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

வழக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்த நிலையில், ஒக்டோபர் 28ஆம் திகதி வழக்கை இறுதித் தடவையாக அழைக்க நீதவான் உத்தரவிட்டார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now