நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு: மூடப்படும் பென்டகனின் ஊட...
News
நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு: மூடப்படும் பென்டகனின் ஊடக அலுவலகங்கள்!
செய்தியாளர்களுக்கான புதிய அங்கீகார விதிகளை நீதிமன்றம் இரத்து செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்க பாதுகாப்புத் துறை (பென்டகன்) தனது ஊடக அலுவலகங்களை மாற்ற முடிவு செய்துள்ளது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிமுகப்படுத்திய புதிய விதிகளின்படி, செய்தியாளர்கள் தங்களுக்கான அனுமதி அட்டையை பெற, இரகசிய தகவல்களை வெளியிட மாட்டோம் என்றும், பென்டகன் அனுமதி அளிக்காத தகவல்களைத் தேட மாட்டோம் என்றும் உறுதி அளிக்க வேண்டியிருந்தது.
இந்த விதிமுறைகள், கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை மீறுவதாகக் கூறி நியூயார்க் டைம்ஸ் தாக்கல் செய்த வழக்கின் பின்னர், நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டன.
இதனையடுத்து, பென்டகனின் முக்கிய ஊடக பகுதியான “Correspondents’ Corridor” மூடப்பட்டு, ஊடக அலுவலகங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என பென்டகன் பிரதான பேச்சாளர் ஷான் பார்னெல் தெரிவித்துள்ளார்.
எனினும், செய்தியாளர்கள் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்புகளில் கலந்து கொள்ளவும், நேர்காணல்களுக்காக கட்டிடத்திற்குள் செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் பென்டகன் வளாகத்திற்குள் இருக்கும் போது அதிகாரிகளின் உடனிருப்புடன் மட்டுமே நகர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிமுகப்படுத்திய புதிய விதிகளின்படி, செய்தியாளர்கள் தங்களுக்கான அனுமதி அட்டையை பெற, இரகசிய தகவல்களை வெளியிட மாட்டோம் என்றும், பென்டகன் அனுமதி அளிக்காத தகவல்களைத் தேட மாட்டோம் என்றும் உறுதி அளிக்க வேண்டியிருந்தது.
இந்த விதிமுறைகள், கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை மீறுவதாகக் கூறி நியூயார்க் டைம்ஸ் தாக்கல் செய்த வழக்கின் பின்னர், நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டன.
இதனையடுத்து, பென்டகனின் முக்கிய ஊடக பகுதியான “Correspondents’ Corridor” மூடப்பட்டு, ஊடக அலுவலகங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என பென்டகன் பிரதான பேச்சாளர் ஷான் பார்னெல் தெரிவித்துள்ளார்.
எனினும், செய்தியாளர்கள் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்புகளில் கலந்து கொள்ளவும், நேர்காணல்களுக்காக கட்டிடத்திற்குள் செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் பென்டகன் வளாகத்திற்குள் இருக்கும் போது அதிகாரிகளின் உடனிருப்புடன் மட்டுமே நகர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.