New Updates! Fresh news just arrived.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் கலைஞர் சங்கமம்: பாரம...

News

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் கலைஞர் சங்கமம்: பாரம்பரிய மற்றும் நவீன கலைஞர்கள் ஒன்று கூடல்!

June 13, 2026 2:25 pm
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் கலைஞர் சங்கமம்: பாரம்பரிய மற்றும் நவீன கலைஞர்கள் ஒன்று கூடல்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கலாமன்றங்களின் கலைஞர்களுக்கான விசேட ஒன்று கூடல் நிகழ்வு, இன்றைய தினம் சனிக்கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில், வருகை தந்திருந்த விருந்தினர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும் பன்னீர் தெளித்து மங்களகரமாக வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, வருகை தந்திருந்த முக்கிய விருந்தினர்களால் மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டு நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தொடர்ந்து நடைபெற்ற அமர்வில், கலந்து கொண்ட கலைஞர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதுடன், தற்காலத்தில் கலைத் துறை சந்திக்கும் சவால்கள், எதிர்கால வளர்ச்சி மற்றும் தங்களின் தேவைகள் குறித்த பல்வேறுபட்ட கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, கலைஞர்களினால் தத்தமது கலைத்துறை சார்ந்த வாழ்வாதார மற்றும் கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான கலை ஆற்றுகைகளும் (நிகழ்த்துகைகளும்) மேடையேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த பாரம்பரியக் கூத்துக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், நவீன நாடக மற்றும் இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் எனப் பல்துறை சார்ந்த கலைஞர்கள் திரளாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

பிராந்திய ரீதியாகக் கலைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களின் கலைத் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கிலும், கலைகளின் ஊடாக சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now