New Updates! Fresh news just arrived.

பண்ணிரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

News

பண்ணிரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

September 20, 2026 7:32 pm
பண்ணிரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தலை மீண்டும் புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கட்டம் 1 (எச்சரிக்கை) அத்தோடு கட்டம் 2 (அவதானம்) ஆகியவற்றின் கீழ் இந்த எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கட்டம் 2 இன் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுதுதப்பட்டுள்ள பகுதிகள்:

காலி மாவட்டம்: நாகொட மற்றும் நெளுவ

கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரளை மற்றும் கங்க இஹள கோரளை

கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை மற்றும் தெஹிஓவிட்ட, தெரணியகல

மாத்தறை மாவட்டம்: பிடபெத்தற

நுவரெலியா மாவட்டம்: கொத்மலை மற்றும் கொத்மலை கிழக்கு

இரத்தினபுரி மாவட்டம்: அயகம, பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை மற்றும் எஹெலியகொட

களுத்துறை மாவட்டம்: பாலின்தநுவர, வலல்லாவிட்ட, அகலவத்தை மற்றும் புலத்சிங்கள

கட்டம் 1 இன் கீழ் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள பகுதிகள்:

கொழும்பு மாவட்டம்: சீதாவக்க

களுத்துறை மாவட்டம்: இங்கிரிய

கேகாலை மாவட்டம்: ருவன்வெல்ல, வரகாப்பொல, அரநாயக்க மற்றும் புலத்கோஹுபிட்டிய

மாத்தறை மாவட்டம்: கொடபொல மற்றும் அக்குரஸ்ஸ

இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல மற்றும் கலவானை

காலி மாவட்டம்: தவலம

இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை முற்பகல் 10.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now