New Updates! Fresh news just arrived.

நாவலப்பிட்டியில் பல வீடுகள் நீரில் மூழ்கின!

News

நாவலப்பிட்டியில் பல வீடுகள் நீரில் மூழ்கின!

September 20, 2026 1:47 pm
நாவலப்பிட்டியில் பல வீடுகள் நீரில் மூழ்கின!
நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை தொடக்கம் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதினால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக, குறித்த பகுதிகளிலுள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதினால் சுமார் 100 குடும்பங்களினை சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, நாவலப்பிட்டியின் கித்துல்கோட்டே, லபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தரஓவிட்ட ஆகிய பகுதிகளிலுள்ள பல தாழ்நிலப் பகுதிகளும் வீடுகளும் இவ்வாறு நீரில் மூழ்கி உள்ளதாகப் பதிவாகியுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now