மாதகல் நுணசை முருகமூர்த்தி ஆலய வருடாந்த இரதோற்சவ திருவிழா...
News
மாதகல் நுணசை முருகமூர்த்தி ஆலய வருடாந்த இரதோற்சவ திருவிழா!
யாழ்ப்பாணம் - மாதகல், நுணசை முருகமூர்த்தி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா நேற்ரூ (30) வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆரம்பத்தில் இடம்பெற்ற கிரியைகளினை தொடர்ந்து கருவறையில் வீற்றிருக்கும் மூல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்ற நிலையில், அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.
பின்னர் முருகப் பெருமான் உள்வீதியின் ஊடாக பிள்ளை தண்டில் வலம்வந்து, சித்திரத்தேரில் எழுந்தருளியாக வீற்றிருந்து, வெளிவீதியுலா வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதன்போது பக்தர்கள் காவடிகள் மற்றும் கற்பூரச்சட்டி மூலம் தமது நேர்த்தி கடன்களினை நிறைவேற்றினர். அத்தோடு, தீ மிதிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
பு.கஜிந்தன்
ஆரம்பத்தில் இடம்பெற்ற கிரியைகளினை தொடர்ந்து கருவறையில் வீற்றிருக்கும் மூல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்ற நிலையில், அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.
பின்னர் முருகப் பெருமான் உள்வீதியின் ஊடாக பிள்ளை தண்டில் வலம்வந்து, சித்திரத்தேரில் எழுந்தருளியாக வீற்றிருந்து, வெளிவீதியுலா வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதன்போது பக்தர்கள் காவடிகள் மற்றும் கற்பூரச்சட்டி மூலம் தமது நேர்த்தி கடன்களினை நிறைவேற்றினர். அத்தோடு, தீ மிதிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
பு.கஜிந்தன்