New Updates! Fresh news just arrived.

மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு : அநுர...

News

மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு : அநுரவுடன் இந்தியப் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

March 25, 2026 3:08 pm
மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு : அநுரவுடன் இந்தியப் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மத்திய கிழக்கில் நிலவும் மாறிவரும் சூழ்நிலைகள் குறித்தும், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் தமது எக்‌ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இலங்கை இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்படும் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய பங்காளிகள் என்ற ரீதியில், பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் ஒன்றிணைந்து நெருக்கமாகச் செயற்படுவதற்கான எமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வளர்ந்து வரும் இந்த நிலைமைகள் பிராந்திய மற்றும் உலகளாவிய விநியோக வலையமைப்புகளில் ஏற்படுத்தும் பாதகமான தாக்கங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now