New Updates! Fresh news just arrived.

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இலங்கையில் பொருட்களின் விலைக...

News

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இலங்கையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்குமா? வர்த்தக அமைச்சர் விசேட அறிவிப்பு

March 7, 2026 9:38 pm
மத்திய கிழக்கு போர் பதற்றம்: இலங்கையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்குமா? வர்த்தக அமைச்சர் விசேட அறிவிப்பு
உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் குறைந்தால் விலை உயர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உலகளவில் விலை உயர்வு பதிவாகியுள்ள நிலையில், அந்த அதிகரிப்பை நாமும் நிச்சயமாகச் சுமக்க வேண்டியிருக்கும் எனவும், இது யாராலும் தடுக்க முடியாத ஒரு நிலைமை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழல் முழு உலகிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகும். குறிப்பாகக் கடல்வழிப் பாதைகளைப் பயன்படுத்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை மேற்கொள்ளும் ஒவ்வொரு நாட்டிற்கும் இது ஒரு பெரும் பிரச்சினையாக அமையும் என ஊடகங்களிடம் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

"மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமை முழு உலகிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகும். குறிப்பாகக் கப்பல் போக்குவரத்துப் பாதைகளைப் பயன்படுத்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை மேற்கொள்ளும் ஒவ்வொரு நாட்டிற்கும் இது ஒரு பிரச்சினையாகும். உலகச் சந்தையில் ஏற்படும் விலை உயர்வை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் குறைந்தால் விலைகள் உயரும். ஏற்கனவே விலை உயர்வு பதிவாகி வருகின்றது, அந்த அதிகரிப்பை நாமும் நிச்சயமாகச் சுமக்க வேண்டியிருக்கும். அதனை எம்மால் தடுக்க முடியாது" எனத் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now