New Updates! Fresh news just arrived.

அன்னை பூபதியின் ஊர்தி தடுக்கப்படவில்லை: பாதுகாப்பு சோதனைய...

News

அன்னை பூபதியின் ஊர்தி தடுக்கப்படவில்லை: பாதுகாப்பு சோதனையே நடந்தது - மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி விளக்கம்!

April 11, 2026 7:06 pm
அன்னை பூபதியின் ஊர்தி தடுக்கப்படவில்லை: பாதுகாப்பு சோதனையே நடந்தது - மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி விளக்கம்!
மருதங்கேணி: வடமராட்சி கிழக்கு பகுதியில் அன்னை பூபதியின் நினைவு ஊர்தி பொலிஸாரால் தடுக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் விளக்குகையில்:

முன் அனுமதி இன்மை: குறித்த ஊர்திப் பயணம் தொடர்பாக முன்னதாக முறையான அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை.

பாதுகாப்பு சோதனை: இதன்காரணமாக, பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் மாத்திரம் ஊர்தி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடர் பயணம்: உரிய விசாரணைகள் மற்றும் சோதனைகளுக்குப் பிறகு, ஊர்தி தனது பயணத்தைத் தொடர பொலிஸாரால் அனுமதி வழங்கப்பட்டது.

தவறான புரிதல் காரணமாகவே ஊர்தி தடுக்கப்பட்டதாகச் செய்திகள் பரவியதாகவும், சட்ட ரீதியான நடைமுறைகளைப் பின்பற்றியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now