New Updates! Fresh news just arrived.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளராக எம்.எஸ்.எம். நி...

News

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளராக எம்.எஸ்.எம். நிஹால் பதவியேற்பு!

September 1, 2026 3:19 pm
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளராக எம்.எஸ்.எம். நிஹால் பதவியேற்பு!
தேசிய காங்கிரஸ் கட்சியினால் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர், பதவிநிலைகளை சுழற்சி முறையில் பகிர்ந்தளிக்கும் எண்ணக்கருவுக்கு அமைவாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பதவியினை ஒலுவில் மண் அலங்கரிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக எம்.எஸ்.எம்.நிஹால் கட்சித் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதித் தவிசாளரின் உத்தியோகபூர்வ பதவியேற்கும் நிகழ்வு 2026.08.31ஆந் திகதி அட்டாளைச்சேனை பிரதேச சபையில் இடம்பெற்றது.

தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர முதல்வருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா முன்னிலையில் தனது கடமைகளை பிரதித் தவிசாளர் பொறுப்பேற்றுருந்தார்.

இந்நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், தேசிய காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான எஸ்.அஹமட் பாயிஸ், பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இரண்டாவது தடவையாக பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட எம்.எஸ்.எம். நிஹால் சிறந்த சமூக சிந்தனையுள்ள ஒரு இளம் தொழிலதிபர் ஆவார். தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், தலைமைக்கும் மிகுந்த விசுவாசத்துடன் இருந்தமைக்கான ஒரு அங்கீகாரமாகவே இதனை கட்சியின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மு.கா.கட்சி ஆட்சியமைப்பதற்கு தேசிய காங்கிரஸ் கட்சி தனது ஆதரவினை வழங்கியிருந்ததுடன், அ.இ.ம.கா கட்சியினர் நடுநிலமை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

கே எ ஹமிட்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now