நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்திற்கு பு...
News
நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர்!
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் வெற்றிடம் நிலவிய நிலையில் அதன் ஆணையாளர் பதவிக்கு, இலங்கை நிர்வாகச் சேவையின் தரம் I அதிகாரியான யூ.எல். மதீஷா ஜினஞ்சலி ஜயதிலகவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு அமைச்சரவையானது அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இவர் இதற்கு முன்பு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினுடைய பணிப்பாளராக (அபிவிருத்தி) பணியாற்றி வந்ததோடு, நன்னடத்தை ஆணையாளர் பதவியின் கடமைகளினை வினைத்திறனுடன் வழிநடத்துவதற்காக அவரிடமுள்ள தகைமைகளைக் கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்திற்கே இவ்வாறு அமைச்சரவையினுடைய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இவர் இதற்கு முன்பு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினுடைய பணிப்பாளராக (அபிவிருத்தி) பணியாற்றி வந்ததோடு, நன்னடத்தை ஆணையாளர் பதவியின் கடமைகளினை வினைத்திறனுடன் வழிநடத்துவதற்காக அவரிடமுள்ள தகைமைகளைக் கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்திற்கே இவ்வாறு அமைச்சரவையினுடைய அங்கீகாரம் கிடைத்துள்ளது.