சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு புதிய அபிவிருத்திக் க...
News
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு புதிய அபிவிருத்திக் குழு நியமனம்!
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை அபிவிருத்திக் குழு (Hospital Development Committee) நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (21) செவ்வாய்க்கிழமை இரவு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையினுடைய பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் எம்.எச். சனூஸ் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழு தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு இந் நியமனங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகளின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் சகீலா இஸ்ஸதீன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பர்ஹான், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ். இம்தியாஸ் உட்பட வைத்தியர்கள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையினுடைய புதிய வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினுடைய தலைவராக மருத்துவர் ஏ.எம்.மிஸ்பாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினுடைய தலைவரும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினுடைய தலைவருமான தொழிலதிபர் எம்.எஸ்.எம். முபாரக், பொறியியலாளர் எஸ்.எம். ஆரீஸ் அக்பர் மற்றும் தாதிய விரிவுரையாளர் எம்.சி.எம்.சி. றிழா, தாதிய உத்தியோகத்தர் ஏ.எச். நியாஸ் மற்றும் புகையிரத திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி எம். எஸார், ஆசிரியர் எம்.பி.எம். பௌஸான் கிராம உத்தியோகத்தர் ஏ.எம். அஜ்ஹர், வர்த்தகர்களான ஏ. கபீர், பி.பி. நபார், ஏ.எம். அபூபக்கர் ஆகியோர் உறுப்பினர்களாகளாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையினுடைய பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் எம்.எச். சனூஸ் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழு தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு இந் நியமனங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகளின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் சகீலா இஸ்ஸதீன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பர்ஹான், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ். இம்தியாஸ் உட்பட வைத்தியர்கள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையினுடைய புதிய வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினுடைய தலைவராக மருத்துவர் ஏ.எம்.மிஸ்பாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினுடைய தலைவரும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினுடைய தலைவருமான தொழிலதிபர் எம்.எஸ்.எம். முபாரக், பொறியியலாளர் எஸ்.எம். ஆரீஸ் அக்பர் மற்றும் தாதிய விரிவுரையாளர் எம்.சி.எம்.சி. றிழா, தாதிய உத்தியோகத்தர் ஏ.எச். நியாஸ் மற்றும் புகையிரத திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி எம். எஸார், ஆசிரியர் எம்.பி.எம். பௌஸான் கிராம உத்தியோகத்தர் ஏ.எம். அஜ்ஹர், வர்த்தகர்களான ஏ. கபீர், பி.பி. நபார், ஏ.எம். அபூபக்கர் ஆகியோர் உறுப்பினர்களாகளாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)