எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு இல்லை: கட்டார் அமீர் உறு...
News
எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு இல்லை: கட்டார் அமீர் உறுதி!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி உடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதுடன், தற்போதைய பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து கட்டாருடனான தனது ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.
இதன்போது, கட்டாரில் உள்ள இலங்கையர்களின் நலன் குறித்து அமீர் உறுதியளித்ததுடன், தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும் நிலையான எரிபொருள் விநியோகத்தைப் பேணுவதில் கட்டார் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்தினார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, சர்வதேச ஊடகம் வெளியிட்ட செய்தி கீழே தரப்பட்டுள்ளது.
"அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க ஆகியோர் இடையே நேற்று தொலைபேசி வழியாக முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த உரையாடலில், பிராந்தியத்தில் நிலவி வரும் சமீபத்திய நிலைமைகள் மற்றும் இருதரப்பு தொடர்புகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக பேசினர்.
இதன்போது, கத்தாரை மற்றும் பரந்த பிராந்தியத்தை பாதிக்கும் வகையில் நடைபெற்று வரும் ஈரான் நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை தனது ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்தார்.
அதேவேளை, கத்தாரில் நிலவும் சூழ்நிலை குறித்து அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி விளக்கமளித்ததுடன், அந்நாட்டில் வாழும் இலங்கை சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பு உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், கத்தாரில் வாழும் அனைவரின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அதிகரித்து வரும் இராணுவ பதற்றம் மற்றும் அதன் உலகளாவிய எரிசக்தி சந்தைகள், விநியோக தொடர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றியும் இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.
இந்த சவால்களை சமாளிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என இலங்கை அதிபர் சுட்டிக்காட்டியதுடன், கத்தார் ஒரு நம்பகமான எரிசக்தி கூட்டாளியாக தொடர்ந்தும் நிலையான விநியோகத்தை உறுதி செய்யும் என்று அமீர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, பிராந்திய பதற்றங்களை குறைத்து நிலைத்தன்மையை ஏற்படுத்த தூதரக முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் என இரு தரப்பும் வலியுறுத்தியுள்ளனர்."
இதன்போது, கட்டாரில் உள்ள இலங்கையர்களின் நலன் குறித்து அமீர் உறுதியளித்ததுடன், தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும் நிலையான எரிபொருள் விநியோகத்தைப் பேணுவதில் கட்டார் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்தினார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, சர்வதேச ஊடகம் வெளியிட்ட செய்தி கீழே தரப்பட்டுள்ளது.
"அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க ஆகியோர் இடையே நேற்று தொலைபேசி வழியாக முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த உரையாடலில், பிராந்தியத்தில் நிலவி வரும் சமீபத்திய நிலைமைகள் மற்றும் இருதரப்பு தொடர்புகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக பேசினர்.
இதன்போது, கத்தாரை மற்றும் பரந்த பிராந்தியத்தை பாதிக்கும் வகையில் நடைபெற்று வரும் ஈரான் நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை தனது ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்தார்.
அதேவேளை, கத்தாரில் நிலவும் சூழ்நிலை குறித்து அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி விளக்கமளித்ததுடன், அந்நாட்டில் வாழும் இலங்கை சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பு உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், கத்தாரில் வாழும் அனைவரின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அதிகரித்து வரும் இராணுவ பதற்றம் மற்றும் அதன் உலகளாவிய எரிசக்தி சந்தைகள், விநியோக தொடர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றியும் இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.
இந்த சவால்களை சமாளிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என இலங்கை அதிபர் சுட்டிக்காட்டியதுடன், கத்தார் ஒரு நம்பகமான எரிசக்தி கூட்டாளியாக தொடர்ந்தும் நிலையான விநியோகத்தை உறுதி செய்யும் என்று அமீர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, பிராந்திய பதற்றங்களை குறைத்து நிலைத்தன்மையை ஏற்படுத்த தூதரக முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் என இரு தரப்பும் வலியுறுத்தியுள்ளனர்."