New Updates! Fresh news just arrived.

நாவலப்பிட்டியில் மண்சரிவால் ஒருவர் உயிரிழப்பு

News

நாவலப்பிட்டியில் மண்சரிவால் ஒருவர் உயிரிழப்பு

August 3, 2026 6:57 pm
நாவலப்பிட்டியில் மண்சரிவால் ஒருவர் உயிரிழப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இவ்வாறு 65 வயதுடைய நபர் ஒருவரே பலியாகியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.

சீரற்ற காலநிலையின் தற்போதைய நிலவரம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், நிலவும் சீரற்ற காலநிலையினால் கண்டி - நாவலப்பிட்டிய பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, நாவலப்பிட்டி பகுதியில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி மேலும் கூறியுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now