New Updates! Fresh news just arrived.

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகர்: கல்முனை நீதிவான் நீ...

News

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகர்: கல்முனை நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

May 26, 2026 10:54 am
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகர்: கல்முனை நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!
பத்தாயிரம் ரூபா தருவதாக கூறி ஓரினச்சேர்க்கையில் (தன்னினச்சேர்க்கை) ஈடுபட்டிருந்த வர்த்தகருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையமொன்றில் நீண்ட காலமாக குறித்த ஓரினச்சேர்க்கை (தன்னினச்சேர்க்கை)செயற்பாடானது இடம்பெற்று வந்துள்ளது.

இதனை அறிந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ள நிலையில் இரு சிறுவர்களையும் வரவேற்ற குறித்த வர்த்தகர் ஓரினச்சேர்க்கை (தன்னினச்சேர்க்கை) செயற்பாட்டிற்காக ரூபா பத்தாயிரம் தருவதாக பேரம் பேசியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சிறுவர்களில் ஒருவரை அச்செயற்பாட்டியில் ஈடுபடுத்தியுள்ள நிலையில் மற்றுமொரு சிறுவன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட காணொளியினை வர்த்தகரினுடைய கைத்தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் ஏற்கனவே பேரம் பேசிய ரூபா பத்தாயிரம் கிடைக்கப்பெறாமையால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட காணொளியினை பதிந்த வர்த்தகரினுடைய கைத்தொலைபேசியினை இரு சிறுவர்களும் அடாத்தாக எடுத்துச்சென்றுள்ளனர்.

அதுமாத்திரமின்றி அச்சிறுவர்கள் குறித்த செயற்பாட்டிற்கு பேரம் பேசிய பணத்தினை தருமாறு கோரி மிரட்டி அச்சுறுத்தியதோடு, தரவேண்டிய தொகை (ரூபா பத்தாயிரம்) கிடைக்கப்பெறாத பட்சத்தில் குறித்த காணொளியினை சமூக ஊடகங்களில் பிரசுரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.(தற்போது குறித்த காணோளி சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டு வைரலாகி வருகின்றது)

இதனைத்தொடர்ந்து, சுதாகரித்த குறித்த 56 வயது திருமணமான வர்த்தகர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக மே மாதம் 06 ஆம் திகதி சென்று முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டில் தனது வர்த்தக நிலையத்திற்கு வருகை தந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் மேசையிலிருந்த விலையுயர்ந்த கைத்தொலைபேசியை திருடிச் சென்றிருப்பதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

மேற்படி, குறித்த வர்த்தகரின் முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் புலன் விசாரணைகளினை முன்னெடுத்து, அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியில் வைத்து குறித்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்களினையும் கைது செய்து கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த மே மாதம் 21 ஆம் திகதி குறித்த வழக்கானது கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த காணொளியை இரு சிறுவர்கள் சார்பாக ஆஜரான எதிர்தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு சமர்ப்பித்திருந்த நிலையில் வழக்கினுடைய சான்றுப்பொருளாக எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிவான் கைதான இரு சிறுவர்களில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனை சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறும் பிரதான சந்தேக நபரான வர்த்தகரினை கைது செய்யுமாறும் கட்டளை பிறப்பித்ததோடு, குறித்த வழக்கை ஒத்தி வைத்தார்.

இதன் போது பிரதான சந்தேக நபரான குறித்த வர்த்தகர் தலைமறைவாகி இருந்ததோடு, குறித்த வழக்கானது நேற்று திங்கட்கிழமை (25) விசாரணைக்காக கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் எடுத்திருந்த நிலையில் 4 நாட்கள் தலைமறைவாகி இருந்த குறித்த வர்த்தகர் 5 சட்டத்தரணிகளோடு, மன்றில் சரணடைந்திருந்தார்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபரான வர்த்தகர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு சட்ட நடவடிக்கைக்காக வாக்கு மூலம் சந்தேக நபரிடம் பதியப்பட்டு பின்பு மீண்டும் மன்றிற்கு அழைத்து வரப்பட்டு மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபரான வர்த்தகருக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 08 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில்வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now