இலங்கையின் கல்வி முறைமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு...
News
இலங்கையின் கல்வி முறைமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் முக்கிய கருத்து...
இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதார சேவைகள் இலங்கையின் நலன்புரி அரசின் அடித்தளமாக இருந்தாலும், தற்போதைய கல்வி முறைமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முக்கிய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், அவுஸ்திரேலியா சர்வதேச விவகாரங்கள் நிறுவனத்தின் (AIIA) பிரதிநிதிகள் குழுவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தற்போதைய கல்வி முறைமை ஆண்டுதோறும் தொழில் சந்தையின் தேவைகளுக்குப் பொருந்தாத ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மனப்பாடம் அடிப்படையிலான கல்வி முறை மற்றும் பாடத்திட்ட பொருத்தப்பாடின்மை, மேலும் மொழி உரிமைகள் அரசியல்மயமாக்கப்பட்டிருப்பது கல்வித் துறையின் முன்னேற்றத்தை பாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் 10,000க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இருந்தாலும், தேசிய மற்றும் முன்னணி பாடசாலைகளே அதிக வளங்களையும் வசதிகளையும் பெறுகின்றன என்றும், பெரும்பாலான பாடசாலைகள் இன்னும் குறைந்த வசதிகளுடனேயே இயங்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் நலன்புரி அரசின் நோக்கமான சமத்துவம், தற்போதைய நடைமுறையில் மேலும் விலகி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
எனவே கல்வித் துறையில் காணப்படும் கட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்த்து, முதலீட்டிற்கு ஏற்ற சூழலை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியையும் போட்டித்திறனையும் வலுப்படுத்துவது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், அவுஸ்திரேலியா சர்வதேச விவகாரங்கள் நிறுவனத்தின் (AIIA) பிரதிநிதிகள் குழுவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தற்போதைய கல்வி முறைமை ஆண்டுதோறும் தொழில் சந்தையின் தேவைகளுக்குப் பொருந்தாத ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மனப்பாடம் அடிப்படையிலான கல்வி முறை மற்றும் பாடத்திட்ட பொருத்தப்பாடின்மை, மேலும் மொழி உரிமைகள் அரசியல்மயமாக்கப்பட்டிருப்பது கல்வித் துறையின் முன்னேற்றத்தை பாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் 10,000க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இருந்தாலும், தேசிய மற்றும் முன்னணி பாடசாலைகளே அதிக வளங்களையும் வசதிகளையும் பெறுகின்றன என்றும், பெரும்பாலான பாடசாலைகள் இன்னும் குறைந்த வசதிகளுடனேயே இயங்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் நலன்புரி அரசின் நோக்கமான சமத்துவம், தற்போதைய நடைமுறையில் மேலும் விலகி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
எனவே கல்வித் துறையில் காணப்படும் கட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்த்து, முதலீட்டிற்கு ஏற்ற சூழலை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியையும் போட்டித்திறனையும் வலுப்படுத்துவது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.