22ஆவது திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் நாளை பரசீலனைக்கு! ...
News
22ஆவது திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் நாளை பரசீலனைக்கு!
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நாளைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதன்படி குறித்த மனுக்களை பரிசீலனை செய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் ஆயம் நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆயத்தின் தலைவராக பிரதம நீதியரசரான ப்ரீத்தி பத்மன் சூரசேன செயற்படவுள்ளார்.
நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ச்சுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் குறித்த ஆயத்தின் ஏனைய உறுப்பினர்களாக செயற்படவுள்ளனர்.
அதன்படி குறித்த மனுக்களை பரிசீலனை செய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் ஆயம் நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆயத்தின் தலைவராக பிரதம நீதியரசரான ப்ரீத்தி பத்மன் சூரசேன செயற்படவுள்ளார்.
நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ச்சுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் குறித்த ஆயத்தின் ஏனைய உறுப்பினர்களாக செயற்படவுள்ளனர்.