New Updates! Fresh news just arrived.

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில் கலந்து...

News

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் கட்டார் நாட்டுக்குப் புறப்பட்டார்

July 14, 2026 9:36 pm
முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் கட்டார் நாட்டுக்குப் புறப்பட்டார்
முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரான அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி அவர்களின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்கும், இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதற்கும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2026 ஜூலை 14ஆம் திகதி மாலை கட்டார் இராச்சியம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

இந்த விஜயத்தின் போது, பிரதமர் அவர்கள், இலங்கையின் இரங்கலைத் தெரிவிப்பதற்கும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மீள உறுதிப்படுத்துவதற்கும் கட்டார் இராச்சியத்தின் உயர்மட்டத் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

இவ்விஜயமானது இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் நிலவும் நெருக்கமான, சினேகபூர்வ உறவினைப் பிரதிபலிப்பதுடன், கட்டார் இராச்சியத்துடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now