New Updates! Fresh news just arrived.

வெற்றிலைக்கேணியில் பனைமரம் கடத்திய மூவர் பொலிசாரால் கைது!...

News

வெற்றிலைக்கேணியில் பனைமரம் கடத்திய மூவர் பொலிசாரால் கைது!

March 8, 2026 8:54 pm
வெற்றிலைக்கேணியில் பனைமரம் கடத்திய மூவர் பொலிசாரால் கைது!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் அதிகளவான பனைமரத்தினை கடத்த முற்பட்ட மூவரை மருதங்கேணி பொலிசார் நேற்று (07) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் பனைமரங்களானது அழிக்கப்பட்டு வெளி இடங்களுக்கு பனைமரங்கள் அதிகளவாக கடத்தப்படுவதாக மருதங்கேணி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற அதிகளவான முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டது

குறித்த சுற்றிவளைப்பில் அனுமதி பத்திரமின்றி பனைமரத்தினை கடத்துவதற்காக மறைத்துவைக்கப்பட்ட பனை மரங்களினை கண்டறிந்ததோடு, அதனுடன் தொடர்புடைய மூவரினையும் மருதங்கேணி பொலிசார் கைது செய்துள்ளனர்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now