New Updates! Fresh news just arrived.

பொலிஸ் நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடிய...

News

பொலிஸ் நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாது: ஷிரந்தி ராஜபக்ஷ!

January 27, 2026 11:20 am
பொலிஸ் நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாது: ஷிரந்தி ராஜபக்ஷ!
தனிப்பட்ட காரணஙளால் இன்று (27) பொலிஸ் நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாது என ஷிரந்தி ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இதன்படி, அங்கு முன்னிலையாவதற்காக அவர் இரண்டு வார கால அவகாசத்தினைகோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடைய பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலதினை பெற்றுக்கொள்வதற்காக, இன்றைய தினம் காலை 9 மணிக்கு பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தருமாறு குறித்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்த காலத்தில் 'சிரிலிய' எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட கணக்கின் நிதி முறைகேடுகள் குறித்து விசாரணைகளுக்காகவே இந்த அழைப்பானது விடுக்கப்பட்டதாக பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவானதுவு குறிப்பிட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now