New Updates! Fresh news just arrived.

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் ப...

News

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக பதவியேற்பு!

April 25, 2026 11:18 am
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக பதவியேற்பு!
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக இன்று தனது கடமைகளை ஆரம்பித்தார்.

சுப நேரத்தில் இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்ற அவர் சப்ரகமுவ மாகாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட நூரிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய நிலையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டள்ளார்.

மேலும் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஸ்தாபக பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் கடந்த புதன்கிழமை ( 23) தனது 38 வருட கால பொலிஸ் சேவையை பூர்த்தி செய்து ஓய்வுபெற்று சென்றிருந்தார்.

அதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஏ.ஜே.டி. சில்வா சிறிது காலம் கடமையாறறி வந்த நிலையில் அவரும் தற்போது இடமாற்றம் பெற்று சென்ற நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திகவிற்கு இந்நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now