New Updates! Fresh news just arrived.

அனுமதி இன்றி பயணித்த லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு...

News

அனுமதி இன்றி பயணித்த லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

February 1, 2026 11:43 am
அனுமதி இன்றி பயணித்த லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் அனுமதி இல்லாமல் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

தர்மபுரம், புளியன்பொக்கனையில் இன்று (1) அதிகாலை குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

உரிமம் இல்லாமல் மணல் கடத்திச் சென்ற லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் சுட்ட துப்பாக்கிச் சூடு லொறியின் பின்புற டயர்களில் பட்டதாகவும், லொறியின் ஓட்டுநர் குறித்த லொறியினை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now