New Updates! Fresh news just arrived.

சட்ட விரோத மண் கொள்ளையில் ஈடுபடும் பிரஜா சக்தி தலைவர் மற்...

News

சட்ட விரோத மண் கொள்ளையில் ஈடுபடும் பிரஜா சக்தி தலைவர் மற்றும் குழுவினர்!

March 21, 2026 12:42 pm
சட்ட விரோத மண் கொள்ளையில் ஈடுபடும் பிரஜா சக்தி தலைவர் மற்றும் குழுவினர்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் மேற்கு பகுதியில் கடந்த காலமாக சட்ட விரோதமாக மண் கொள்ளை நடவெடிக்கை இடம்பெற்று வருவதை தொடர்ந்து மருதங்கேணி பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இவ் குற்ற செயலில் ஈடுபடும் நபர்களை கைது செய்துள்ளனர்

அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நாகர் கோவில் மேற்கு பகுதியில் சட்ட விரோத மண் கொள்ளை இடம் பெறுகிறது என நாகர் கோவில் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ் இடத்திற்கு சென்ற கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சட்ட விரோதமாக மண் கொள்ளையில் ஈடுபடும் அவ் கிராமத்தின் பிரஜா சக்தி தலைவர் மற்றும் அவரின் குழுவினரை அவதானித்து உள்ளார்

கிராமங்கள் தோறும் இடம் பெரும் ஊழல்களை ஒழிப்பதற்கு மற்றும் கிராம அபிவிருத்தி என்பவற்றிக்கு தேசிய மக்கள் சக்தியினாரால் தெரிவு செய்யப்பட்ட இந்த பிரஜா சக்தி தலைவர் மற்றும் அவரின் குழுவினரே இவ்வாறான சட்ட விரோதமான நடவெடிக்கைகளில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் பாரியளவு விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது

இச் சம்பவம் தொடர்பாக வடமராட்சி கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரிடம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கூறிய போது இச் சம்பவத்தை வெளியே விட வேண்டாம் என கூறி உள்ளதோடு தாம் இதற்கான நடவெடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now