நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு கோரிக்க...
News
நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை!
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 80 நீர்த்தேக்கங்களினுடைய மொத்த நீர்க்கொள்ளளவு தற்போது 48 சதவீதமாகக் காணப்படுவதாக நீர்ப்பாசனப் பணிப்பாளரும் நீர் முகாமைத்துவ பொறியியலாளருமான எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொதுமக்களிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், சிறுபோக விவசாய நடவடிக்கைகளானது தற்போது நிறைவடைந்துள்ளதால், தற்போதுள்ள நீரின் அளவு அதற்குப் போதுமானதாக இருக்கும் எனவும் பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த நீர்த்தேக்கங்கள் மூலம் குடிநீர் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் மக்களுக்கான குடிநீர்த் தேவையும் போதுமான அளவிலுள்ளதாக எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் நீர்ப்பாசனப் பணிப்பாளரும் நீர் முகாமைத்து பொறியியலாளருமான எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொதுமக்களிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், சிறுபோக விவசாய நடவடிக்கைகளானது தற்போது நிறைவடைந்துள்ளதால், தற்போதுள்ள நீரின் அளவு அதற்குப் போதுமானதாக இருக்கும் எனவும் பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த நீர்த்தேக்கங்கள் மூலம் குடிநீர் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் மக்களுக்கான குடிநீர்த் தேவையும் போதுமான அளவிலுள்ளதாக எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் நீர்ப்பாசனப் பணிப்பாளரும் நீர் முகாமைத்து பொறியியலாளருமான எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.