அடுத்த ஆண்டுக்கான மூலதனச் செலவினத்திற்கு 2,000 பில்லியன் ...
News
அடுத்த ஆண்டுக்கான மூலதனச் செலவினத்திற்கு 2,000 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!
வரும் ஆண்டுக்கான மூலதனச் செலவினமாக 2,000 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் 14 சாலைகள் அபிவிருத்தி செய்யப்படும் பணிகளுக்கான திறப்பு விழாவில் இன்று (13) பங்கேற்றபோது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு மூலதனச் செலவினமாக அரசாங்கம் சுமார் 350 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டில், மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் களுத்துறை மாவட்டத்தில் கிராமப்புற சாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக 550 மில்லியன் ரூபா மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, பாலங்கள் மற்றும் சிறுபாலங்களின் அபிவிருத்திக்காக மேலும் 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இங்கு தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலை மற்றும் அது தொடர்பான அபிவிருத்திப் பணிகளுக்காக ஒட்டுமொத்தமாக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் அரச வருவாயைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்க முடிந்துள்ளது என்றும், கடந்த ஆண்டின் அரச வருவாய் 5,500 பில்லியனாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், நாட்டின் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும், சுற்றுலாத் துறையும் வளர்ச்சி கண்டு வருகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிடடுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் 14 சாலைகள் அபிவிருத்தி செய்யப்படும் பணிகளுக்கான திறப்பு விழாவில் இன்று (13) பங்கேற்றபோது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு மூலதனச் செலவினமாக அரசாங்கம் சுமார் 350 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டில், மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் களுத்துறை மாவட்டத்தில் கிராமப்புற சாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக 550 மில்லியன் ரூபா மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, பாலங்கள் மற்றும் சிறுபாலங்களின் அபிவிருத்திக்காக மேலும் 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இங்கு தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலை மற்றும் அது தொடர்பான அபிவிருத்திப் பணிகளுக்காக ஒட்டுமொத்தமாக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் அரச வருவாயைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்க முடிந்துள்ளது என்றும், கடந்த ஆண்டின் அரச வருவாய் 5,500 பில்லியனாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், நாட்டின் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும், சுற்றுலாத் துறையும் வளர்ச்சி கண்டு வருகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிடடுள்ளார்.