New Updates! Fresh news just arrived.

புனித தலைப்பிறை தென்படவில்லை: நாளை மறுநாள் நோன்பு பெருநாள...

News

புனித தலைப்பிறை தென்படவில்லை: நாளை மறுநாள் நோன்பு பெருநாள்!

March 19, 2026 7:51 pm
புனித தலைப்பிறை தென்படவில்லை: நாளை மறுநாள் நோன்பு பெருநாள்!
புனித தலைப்பிறை தென்படாததன் காரணமாக புனித நோன்புப் பெருநாள் நாளை மறுதினம் (21) கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (19) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன்போது ஷவ்வால் மாத தலைப்பிறை நாட்டின் எப்பகுதியிலும் தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இதனால் நாளை ரமழான் நோன்பை 30 ஆக பூர்த்தி செய்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் நாளை மறுதினம் நோன்புப் பெருநாளை கொண்டாடலாமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now