New Updates! Fresh news just arrived.

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை: ஒரு இலட்சம் அப...

News

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை: ஒரு இலட்சம் அபராதம் விதிப்பு!

July 1, 2026 1:41 pm
கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி  விற்பனை: ஒரு இலட்சம்  அபராதம் விதிப்பு!
அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு, அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி (import Paal Ponni) அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் 100,000/= ரூபா அபராதம் விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, 2 கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி அரிசி பொதியை அரசாங்கம் நிர்ணயித்திருந்த கிலோ ஒன்றிற்கான 255/= ரூபா கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

குறித்த வர்த்தக நிலையத்திற்கு 100,000 ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now