New Updates! Fresh news just arrived.

சரோஜா திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் ...

News

சரோஜா திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் விழா!

January 5, 2026 6:06 pm
சரோஜா திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள்  வழங்கும் விழா!
குடும்ப சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட பிள்ளைகளை பாதுகாப்பதற்கான சரோஜா திட்டத்துடன் இணைந்து அத்தகைய பிள்ளைகளுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்களை வழங்கும் விழா அம்பாறை தலைமையக காவல்துறை கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (4) நடைபெற்றது.

கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் கருத்தின்படி கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட சரோஜா திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் சுமார் 7000 பாதிக்கப் பட்ட பிள்ளைகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள 22 பொலிஸ் நிலையங்களினை சேர்ந்த 350 பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பேசிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர சரோஜா திட்டம் கிழக்கு மாகாணத்தில் குடும்ப சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை அடையாளம் காணும் ஒரு திட்டம் என்று கூறினார்.

2024 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் 304 குழந்தைகள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகினர். இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கியவர்களில் எண்பது சதவீதம் பேர் பாதுகாப்பற்ற குழந்தைகள். பாதுகாப்பற்ற பிள்ளைகள் பெற்றோரின் அன்பும் கவனிப்பும் இல்லாத குழந்தைகள். இந்தக் குழந்தைகளினை பாதுகாப்பதற்கான திட்டமானது கடந்த ஜூன் 12 ஆம் திகதி மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது இலங்கை பொலிஸ் துறையில் கிழக்கு மாகாணத்தில் 912 பாதுகாப்பற்ற குழந்தைகளை அடையாளம் கண்டிருந்தது. ஆனால் இதுவரை கிழக்கு மாகாணத்தில் 7000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பற்ற குழந்தைகளானது அம்பாறை பிரிவில் உள்ளனர். குறித்த பிரிவில் 2818 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தக் குழந்தைகளை அடையாளம் காண்பது பயனற்றது.அவர்களுக்காக ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். இதன் முக்கிய அம்சம் இந்த குழந்தைகள் பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்பதாகும்.

இந்தத் திட்டத்திற்கான புத்தகங்களை விநியோகிப்பது எங்கள் தலைவர் ஐஜிபி பிரியந்த விஜேசூரிய மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவர் வழக்கறிஞர் நில்மினி சமரதுங்க ஆகியோரால் செய்யப்படுகிறது. இதற்காக நாங்கள் ஐஜிபிக்கு நன்றி கூறுகிறோம்.

கடந்த ஆறு மாதங்களாகஇ கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய அதிகாரிகளும்இ பெண் அதிகாரிகளும் கிராமம் கிராமமாகச் சென்றுஇ பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளை மிகுந்த முயற்சியுடன் அடையாளம் கண்டுள்ளனர். அந்த அர்ப்பணிப்பைச் செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.

இந்த நிகழ்வில் அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, அம்பாறை பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார, அம்பாறை பிரிவு 1 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன, அம்பாறை பிரதேச மகளிர் பணியக பொறுப்பதிகாரி, தலைமைப் பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now