யாழ். பல்கலை புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வே...
News
யாழ். பல்கலை புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வலிகாமம் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தினுடைய பீடாதிபதியாக செயற்பட்டு வருகின்றார்.
தற்போதைய துணைவேந்தரினுடைய பதவிக் காலம் எதிர்வருகின்ற மார்ச் 24 ஆம் திகதியோடு நிறைவடையவுள்ள நிலையில் எதிர்வரும் 25.03.2026 தொடக்கம் பேராசிரியர் தி.வேல்நம்பி துணைவேந்தராக பதவியேற்கவுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகப் பதிவாளரினால் கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில் துணைவேந்தருக்கான தேர்தலில் அதிக புள்ளிகளினைப் பெற்று முதன்மை நிலையினை வேல்நம்பி பெற்றிருந்தார்.
அத்தோடு, கடந்த மூன்று தடவைகள் இடம்பெற்றிருந்த துணைவேந்தர் தேர்தலில் வேல்நம்பி முதல் மூன்று ஸ்தானங்களுள் தெரிவாகி இருந்தார்.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களினை தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, பேரவையினுடைய விசேட கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் பெறும் புள்ளி ஒழுங்கில் முதல் மூன்று இடங்களினைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் படி ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரினை ஜனாதிபதி தெரிவு செய்து துணைவேந்தராக நியமிப்பார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய துணைவேந்தராக பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பு.கஜிந்தன்
வலிகாமம் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தினுடைய பீடாதிபதியாக செயற்பட்டு வருகின்றார்.
தற்போதைய துணைவேந்தரினுடைய பதவிக் காலம் எதிர்வருகின்ற மார்ச் 24 ஆம் திகதியோடு நிறைவடையவுள்ள நிலையில் எதிர்வரும் 25.03.2026 தொடக்கம் பேராசிரியர் தி.வேல்நம்பி துணைவேந்தராக பதவியேற்கவுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகப் பதிவாளரினால் கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில் துணைவேந்தருக்கான தேர்தலில் அதிக புள்ளிகளினைப் பெற்று முதன்மை நிலையினை வேல்நம்பி பெற்றிருந்தார்.
அத்தோடு, கடந்த மூன்று தடவைகள் இடம்பெற்றிருந்த துணைவேந்தர் தேர்தலில் வேல்நம்பி முதல் மூன்று ஸ்தானங்களுள் தெரிவாகி இருந்தார்.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களினை தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, பேரவையினுடைய விசேட கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் பெறும் புள்ளி ஒழுங்கில் முதல் மூன்று இடங்களினைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் படி ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரினை ஜனாதிபதி தெரிவு செய்து துணைவேந்தராக நியமிப்பார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய துணைவேந்தராக பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பு.கஜிந்தன்