New Updates! Fresh news just arrived.

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத...

News

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்திற்கு சபாநாயகர் ஒப்புதல்!

March 20, 2026 9:44 pm
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்திற்கு சபாநாயகர் ஒப்புதல்!
இலங்கை பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் இன்று (20) தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.

இந்த சட்டத்தின் மூலம், இலங்கையில் பணம் கடன் வழங்குதல் மற்றும் நுண்நிதி செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும், கண்காணிக்கவும் வலுவான சட்ட வடிவமைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக புதிய ஒழுங்குமுறை அதிகார சபையை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த அதிகார சபையின் முக்கிய நோக்கம்,
அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குநர்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல்,
அவற்றுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்களை பாதுகாத்தல்,
மேலும் மத்திய வங்கி மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகும்.

மேலும், இந்த புதிய சட்டத்தின் மூலம், 2016 ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதி சட்டம் இரத்து செய்யப்படுவதுடன், அதனுடன் தொடர்புடைய விதிமுறைகளும் புதுப்பிக்கப்படுகின்றன.

இந்த மசோதா 2025 நவம்பர் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதல் முறையாக சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2026 மார்ச் 4 அன்று நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, இச்சட்டம் 2026 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் சட்டமாக, இன்று (20) முதல் அமுலுக்கு வந்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now