New Updates! Fresh news just arrived.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு...

News

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

March 31, 2026 12:48 pm
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு
இலங்கைக்கு சொந்தமான 42,000 மெட்ரிக் டொன் எரிவாயு இருப்பு தற்போது மாலைத்தீவில் நிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்ய இந்த அளவு போதுமானது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த இருப்பை கூடிய விரைவில் நாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மே மாதத்திற்கு தேவையான 33,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிச்செல்லும் ஒரு கப்பல் ஏப்ரல் 25 ஆம் திகதி நாட்டிற்கு வந்து சேரும் என்றும் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், 7,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிச்செல்லும் ஒரு கப்பல் ஏப்ரல் 4 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நலிந்த குருகுலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now