New Updates! Fresh news just arrived.

விவசாயிகளுக்கு விசேட மானியம் : ஜனாதிபதி அறிவித்துள்ள புதி...

News

விவசாயிகளுக்கு விசேட மானியம் : ஜனாதிபதி அறிவித்துள்ள புதிய திட்டங்கள்

April 9, 2026 3:13 pm
விவசாயிகளுக்கு விசேட மானியம் : ஜனாதிபதி அறிவித்துள்ள புதிய திட்டங்கள்
கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பதே எமது அரசின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

59 ஆவது தேசிய புத்தரிசி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், விவசாயிகளின் நில உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், சிக்கலற்ற காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சிதைந்துள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குளங்களை மீளப்புனரமைக்கும் திட்டத்தை அரசு உறுதியுடன் செயல்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தம்மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு அஞ்சப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடமத்திய மாகாண மகா கால்வாய் திட்டத்தின் கீழ், மொரகஹகந்த - களுகங்கை நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை கொண்டு செல்லும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை பொதுவான உர மானியம் 5,000 ரூபாவினாலும், மரக்கறி பயிர்ச்செய்கைக்கான மானியம் 3,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய தலைமுறையினரை இதில் ஈர்க்கும் திட்டங்களும் தயாராகி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now