பேராதனைப் பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம் - Gu...
News
பேராதனைப் பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
நிலவும் சீரற்ற வானிலையைக் கவனத்திற் கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும், பரீட்சைகளும் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன:
தமது சொந்தப் பிரதேசங்களுக்குப் பாதுகாப்பாகப் பயணிக்கக்கூடிய மாணவ, மாணவிகள் அவ்வாறு புறப்பட்டுச் செல்ல முடியும்.
சீரற்ற காலநிலை காரணமாக வீடுகளுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், 'சரஸவி மெதுர' விடுதியைத் தவிர்த்து, பல்கலைக்கழக விடுதி நிர்வாகத்திற்கு அறிவித்துத் தங்கியிருக்க முடியும்.
அபாயகரமான தனியார் தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவ, மாணவிகள் தமது பாதுகாப்பிற்காகப் பல்கலைக்கழக விடுதிகளுக்கு வருகை தந்தால், அவர்களை ஏற்றுக்கொண்டு தேவையான பதிவுகளைப் பேணுமாறு விடுதி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு மாணவரும் விடுதிகளை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும் பல்கலைக்கழகம் வலியுறுத்தி கூறியுள்ளது.
தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பும் வரை பல்கலைக்கழக சமூகத்தினர் அனைவரையும் தமது பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயற்படுமாறு பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
எவ்வாறாயினும், பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன:
தமது சொந்தப் பிரதேசங்களுக்குப் பாதுகாப்பாகப் பயணிக்கக்கூடிய மாணவ, மாணவிகள் அவ்வாறு புறப்பட்டுச் செல்ல முடியும்.
சீரற்ற காலநிலை காரணமாக வீடுகளுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், 'சரஸவி மெதுர' விடுதியைத் தவிர்த்து, பல்கலைக்கழக விடுதி நிர்வாகத்திற்கு அறிவித்துத் தங்கியிருக்க முடியும்.
அபாயகரமான தனியார் தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவ, மாணவிகள் தமது பாதுகாப்பிற்காகப் பல்கலைக்கழக விடுதிகளுக்கு வருகை தந்தால், அவர்களை ஏற்றுக்கொண்டு தேவையான பதிவுகளைப் பேணுமாறு விடுதி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு மாணவரும் விடுதிகளை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும் பல்கலைக்கழகம் வலியுறுத்தி கூறியுள்ளது.
தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பும் வரை பல்கலைக்கழக சமூகத்தினர் அனைவரையும் தமது பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயற்படுமாறு பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.