ஆரம்பமானது வடக்கு மாகாண முதலீட்டு மாநாடு!
News
ஆரம்பமானது வடக்கு மாகாண முதலீட்டு மாநாடு!
வட பிராந்தியத்திலுள்ள முதலீட்டு வாய்ப்புகளினை உலகிற்கு திறக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு முதலீட்டு உச்சி மாநாடு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், மேம்பாட்டு பங்காளிகள் மற்றும் பல பொது மற்றும் தனியார் நிறுவனங்களினுடைய பங்கேற்போடு, ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவ கலாச்சார மையத்தில் நடைபெற்று வருகின்றது.
இதன்படி, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சரான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர், அமைச்சர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கிலுள்ள 5 மாவட்டங்களினுடைய அரசாங்க அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பு.கஜிந்தன்
இதன்படி, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சரான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர், அமைச்சர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கிலுள்ள 5 மாவட்டங்களினுடைய அரசாங்க அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பு.கஜிந்தன்